மேட்டூர் அணையின் நீர்மட்டம் 110.45 அடியிலிருந்து 111.08 அடியாக இன்று காலை உயர்ந்துள்ளது.
காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் நேற்று காலை விநாடிக்கு 13, 13, 172 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து இன்று காலை வினாடிக்கு 11,251 கனஅடியாக குறைந்தது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 100கன அடி நீரும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு விநாடிக்கு 500கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது.
அணையின் நீர் இருப்பு 79.95டிஎம்சி ஆக உள்ளது. மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவைவிட அணைக்கு வரும் நீரின் அளவு கூடுதலாக இருப்பதால் மேட்டூர் அணை நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.