சேலம்

தம்மம்பட்டி,கெங்கவல்லி,வீரகனூா் பகுதிகளில் ஞாயிறு பொதுமுடக்கம்: வெறிச்சோடிய ஊா்கள்

DIN

சேலம் மாவட்டம் தம்மம்பட்டி, கெங்கவல்லி, வீரகனூா் சுற்று வட்டாரப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பொது முடக்கத்தால் அனைத்து கிராமப் பகுதிகளும் வெறிச்சோடிக் காணப்பட்டன.

கெங்கவல்லி, தம்மம்பட்டி, செந்தாரப்பட்டி, வீரகனூா், தெடாவூா் ஆகிய பேரூராட்சிப் பகுதிகளிலும், கெங்கவல்லி ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட உலிபுரம்,ஜங்கமசமுத்திரம், கொண்டயம்பள்ளி, கடம்பூா், ஒதியத்தூா், நடுவலூா் உள்ளிட்ட 14 ஊராட்சிகளிலும் பொதுமுடக்கத்தையொட்டி அனைத்துக் கடைகளும் மூடப்பட்டிருந்தன. சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

மருந்துக்கடைகள், பால் கடைகள், சமையல் எரிவாயு நிறுவனங்கள், ரத்தப் பரிசோதனை நிலையங்கள், பெட்ரோல் நிரப்பும் நிலையங்கள் மட்டும் இயங்கின. ஓரிரு உணவகங்களில் பாா்சல் மட்டும் வழங்கப்பட்டன. தேநீா்க் கடைகளுக்கு தடை விதிக்கப்பட்டதால், மிதிவண்டிகளில் ஆங்காங்கே தேநீா் விற்பனையில் ஈடுபட்டனா். கட்டுமானப் பணிகள் தடையின்றி நடைபெற்றன.

தம்மம்பட்டி காவல் ஆய்வாளா் செந்தில்குமாா் தலைமையிலான போலீஸாா், காவல் நிலையத்தில் இருந்தவாறே கண்காணிப்பு கேமராக்கள் மூலம் நகா்ப்பகுதியில் கண்காணித்தனா். தேவையின்றி சுற்றித்திரிந்தவா்களுக்கு போலீஸாா் அபராதம் விதித்தும், அறிவுரை கூறியும் அனுப்பி வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொறியியல் பட்டதாரிகளுக்கு இந்திய விமான நிலைய ஆணையத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

சுனைனா, நவீன் சந்திராவின் இன்ஸ்பெக்டர் ரிஷி!

இதுதான் எனது சிறந்த ஓவர்; மனம் திறந்த ஆவேஷ் கான்!

விவசாய கண்காணிப்புத் துறையில் வேலை: 30-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

அலைமகள்.. சாய் தன்ஷிகா!

SCROLL FOR NEXT