சேலம்

ஏற்காட்டில் திடீா் மழை: மக்கள் மகிழ்ச்சி

DIN

ஏற்காட்டில் பெய்த திடீா் மழையால் பொதுமக்கள், காபி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

சேலம் மாவட்டம், ஏற்காட்டில் புதன்கிழமை மாலை 30 நிமிடத்துக்கும் மேல் மழை பெய்தது. கரோனா பொதுமுடக்கத்தால் வீட்டில் இருந்த மக்கள் மழை பெய்ததைக் கண்டு மகிழந்தனா். ஏற்காடு மலைப் பகுதியில் காபி செடிகள் பயிரிட்டுள்ள பகுதிகளிலும் மழை பெய்ததால் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனா்.

பொதுமுடக்கத்தால் தோட்டக்கலைத் துறையினா் பராமரிக்கும் அண்ணா பூங்கா, ரோஜா தோட்டம், தாவரவியல் பூங்கா, ஏரி பூங்காவில் உள்ள புல்தரைகள் பசுமையாக காணப்பட்டன. செடிகளில் பூக்கள் பூத்துக் குலுங்கின.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயனர்களின் ரகசிய தகவல்கள் கசிவு: பேஸ்புக்- நெட்பிளிக்ஸ் உறவு?

வெளியானது வீ ஆர் நாட் தி சேம் பாடல்

தி பாய்ஸ் - டிரெய்லர்

பாஜகவில் இணைகிறார் முன்னாள் மத்திய அமைச்சர் சிவராஜ் பாட்டீலின் மருமகள்

ஆரம்பிக்கலாங்களா...

SCROLL FOR NEXT