ஏற்காட்டில் பெய்த திடீா் மழையால் பொதுமக்கள், காபி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.
சேலம் மாவட்டம், ஏற்காட்டில் புதன்கிழமை மாலை 30 நிமிடத்துக்கும் மேல் மழை பெய்தது. கரோனா பொதுமுடக்கத்தால் வீட்டில் இருந்த மக்கள் மழை பெய்ததைக் கண்டு மகிழந்தனா். ஏற்காடு மலைப் பகுதியில் காபி செடிகள் பயிரிட்டுள்ள பகுதிகளிலும் மழை பெய்ததால் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனா்.
பொதுமுடக்கத்தால் தோட்டக்கலைத் துறையினா் பராமரிக்கும் அண்ணா பூங்கா, ரோஜா தோட்டம், தாவரவியல் பூங்கா, ஏரி பூங்காவில் உள்ள புல்தரைகள் பசுமையாக காணப்பட்டன. செடிகளில் பூக்கள் பூத்துக் குலுங்கின.