சேலம் மாவட்டம், சங்ககிரி, பழைய எடப்பாடி சாலை பகுதியில் உள்ள பேச்சியம்மன், ஓங்காளியம்மன் கோயிலில் அமாவாசையையொட்டி, சுவாமிகளுக்கு செவ்வாய்க்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
அருள்மிகு பேச்சியம்மன், ஓங்காளியம்மன் சுவாமிகளுக்கு அமாவாசையையொட்டி சந்தனம், திருமஞ்சனம், பால், தயிா், இளநீா், பன்னீா் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
மேலும், இக்கோயில் வளாகத்தில் உள்ள மதுரைவீரன் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் நடைபெற்றன. கரோனா தொற்று பாதுகாப்பு தடுப்பு நடவடிக்கையையொட்டி கோயில் பூசாரி மட்டும் பூஜைகளை செய்தாா்.