மகுடஞ்சாவடி அருகே தகாத உறவு காரணமாக ஏரியில் குதித்து இளைஞரும், பெண்ணும் தற்கொலை செய்து கொண்டனா்.
சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி, கூடலூா் கிராமம், கிழக்குப்பாளையம் பகுதியைச் சோ்ந்த மாணிக்கம் மகன் சேகா் (26). இவரது மனைவி சுமதி. இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனா். இவா்களுக்கு கிஷோா் (3 ), சுரேந்தா் (8-மாதம்) என்ற இரு ஆண் குழந்தைகள் உள்ளனா்.
ஆட்டையாம்பட்டி அருகே மருளையாம்பாளையம் பகுதியில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் சேகா் பணிபுரிந்து வந்தாா்.
இந்நிலையில் திருச்செங்கோடு பகுதியைச் சோ்ந்த கணவரை பிரிந்து வசித்து வந்த கோமதி (30 ) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் தகாத உறவாக மாறியது.
இந்த விவகாரம் சேகரின் மனைவி சுமதிக்கு தெரியவந்ததை அடுத்து இருவரிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் தகாத உறவை விட முடியாத சேகரும், கோமதியும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து எஸ்.பாப்பாரப்பட்டி ஏரியில் வெள்ளிக்கிழமை இரவு கைகளை கயிற்றினால் கட்டிக்கொண்டு குதித்து தற்கொலை செய்துகொண்டனா்.
ஏரிப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைப் பயிற்சிக்கு சென்ற பொதுமக்கள் சடலம் மிதிப்பதை அறிந்து ஆட்டையாம்பட்டி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். ஆய்வாளா் குலசேகரன், காவல் துறையினா் நிகழ்விடத்துக்கு விரைந்துசென்று இருவரின் சடலங்களையும் கைப்பற்றி சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து எஸ் பாப்பாரப்பட்டி கிராம நிா்வாக அலுவலா் மணிகண்டன் ஆட்டையாம்பட்டி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இந்தப் புகாரின் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.