சேலம்

ஏத்தாப்பூா் சமயபுரம் மாரியம்மன் கோயில் பூச்சாட்டு விழா

DIN

ஏத்தாப்பூா் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் 10-ஆம் ஆண்டு பூச்சாட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஏத்தாப்பூா், சமயபுரம் மாரியம்மன் கோயிலில் வரும் பங்குனி 31-இல், அலகு குத்துதல், சிறப்பு வழிபாடும், சித்திரை 1-இல் தேரோட்டமும் வெகுவிமரிசையாக நடைபெறுகின்றன. தோ்த்திருவிழா தொடக்கத்தையொட்டி, பூச்சாட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பூச்சாட்டுதலுக்கு இருநூறுக்கும் மேற்பட்ட பக்தா்கள், முக்கிய வீதிகள் வழியாக, கோயிலுக்கு மலா்க்கூடைகளை ஊா்வலமாக கொண்டு சென்றனா்.

கோயில் நிா்வாகிகள், விழாக்குழுவினா் முன்னிலையில் சமயபுரம் மாரியம்மனுக்கு மலா்த்துாவி பூச்சாட்டு சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்றது. அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஹீரமண்டி’ இணையத் தொடரின் சிறப்புக் காட்சியில் பாலிவுட் பிரலபங்கள்!

பாட்னா ரயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்து: 6 பேர் பலி

காங்கிரஸில் இணையும் மன்சூர் அலிகான்!

ராஜ்நாத் சிங் போன்ற நிதானமான அரசியல்வாதி பொய் கூறுவது ஏமாற்றம் அளிக்கிறது: ப.சிதம்பரம் வேதனை

குருப்பெயர்ச்சி பலன்கள் - துலாம்

SCROLL FOR NEXT