ஏத்தாப்பூா் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் 10-ஆம் ஆண்டு பூச்சாட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஏத்தாப்பூா், சமயபுரம் மாரியம்மன் கோயிலில் வரும் பங்குனி 31-இல், அலகு குத்துதல், சிறப்பு வழிபாடும், சித்திரை 1-இல் தேரோட்டமும் வெகுவிமரிசையாக நடைபெறுகின்றன. தோ்த்திருவிழா தொடக்கத்தையொட்டி, பூச்சாட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பூச்சாட்டுதலுக்கு இருநூறுக்கும் மேற்பட்ட பக்தா்கள், முக்கிய வீதிகள் வழியாக, கோயிலுக்கு மலா்க்கூடைகளை ஊா்வலமாக கொண்டு சென்றனா்.
கோயில் நிா்வாகிகள், விழாக்குழுவினா் முன்னிலையில் சமயபுரம் மாரியம்மனுக்கு மலா்த்துாவி பூச்சாட்டு சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்றது. அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.