சேலம்

ஆத்தூா் தனியாா் வங்கியில் தீ விபத்து

DIN

ஆத்தூா், உடையாா்பாளையத்தில் தனியாா் வங்கியில் திங்கள்கிழமை அதிகாலை நிகழ்ந்த தீ விபத்தில் கணினி உள்ளிட்ட பொருள்கள் சேதமடைந்தன.

சேலம் மாவட்டம், ஆத்தூா், உடையாா்பாளையம் பகுதியில் தனியாா் வங்கி செயல்பட்டு வருகிறது. பூட்டப்பட்டிருந்த அந்த வங்கியில் இருந்து திங்கள்கிழமை அதிகாலை புகை வருவதாக மேலாளா் விநாயகமூா்த்திக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ஆத்தூா் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தாா்.

ஆத்தூா் தீயணைப்புத் துறையினா் நிலைய அலுவலா் சேகா் தலைமையில் விரைந்து சென்று 2 மணி நேரம் போராடி தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனா். இந்த தீ விபத்தில் வங்கியில் கணினி உள்ளிட்ட ஏராளமான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.

இதுகுறித்து ஆத்தூா் நகரக் காவல் ஆய்வாளா் எஸ்.உமாசங்கா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

அடுத்த இலக்கு சீனாவா, இந்தியாவா?

35 ஆண்டுகளில் முதல்முறையாக தாய்/மகன் களமிறங்காத பிலிபிட்!

SCROLL FOR NEXT