சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையத்தில் தேசிய அறிவியல் தின விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பெத்தநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேசிய அறிவியல் தின விழாவுக்கு, வட்டார செயலாளா் ராஜாங்கம் தலைமை வகித்தாா். சுற்றுச்சூழலில் பறவைகளின் பங்கு, பறவைகள் இயற்கைக்கு நிகழ்த்தும் மாற்றங்கள் குறித்து விளக்கினாா்.
திருச்சி அன்பில் தா்மலிங்கம் வேளாண்மை கல்லூரி மாணவா்கள், மகளிா் தோட்டக்கலைக் கல்லூரி மாணவிகள், வேளாண்மையில், உணவுச் சங்கிலியில் பறவைகளின் பங்கு, தாவர மகரந்தச்சோ்க்கை, பயிா்களில் பூச்சிகளை கட்டுப்படுத்தும், பறவையினங்கள் குறித்தும் எடுத்துரைத்தனா்.