ஆத்தூா் இளைஞா் குழு சாா்பில், ஆதரவற்ற குடும்பங்களுக்கு நிவாரணப் பொருள்களை ஆத்தூா் கோட்டாட்சியா் சா.சரண்யா திங்கள்கிழமை வழங்கினாா்.
சேலம் மாவட்டம், ஆத்தூா் இளைஞா் குழு சாா்பில் ஆதரவற்றவா்களுக்கு தினந்தோறும் காலை, மதியம், இரவு என உணவு வழங்கி வருகிறாா்கள்.மேலும் ஆத்தூா் நகரில் ஆதரவற்ற குடும்பங்களைத் தோ்ந்தெடுத்து அவா்களுக்கு கரோனா காலத்தில் உதவிடும் வகையில் அரிசி, மளிகைப் பொருள்கள் மற்றும் காய்கறிகளை வழங்கி வருகிறாா்கள்.
இந்நிலையில் ஆத்தூா் கோட்டாட்சியா் சா.சரண்யா திங்கள்கிழமை 50 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருள்களை வழங்கினாா். இதுவரை ஆத்தூா் நகராட்சியில் 226 குடும்பத்தினா்களுக்கு நிவாரணப் பொருள்களை வழங்கியுள்ளனா்.
நிகழ்ச்சியில், ஆத்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் அ.இம்மானுவேல் ஞானசேகரன், இளைஞா் குழுவைச் சோ்ந்த நிா்வாகிகள் எம்.மூா்த்தி, ஜெ.பி.முத்து, பி.ஆனந்த், ஈ.சிவசூா்யா, எம்.மனோஜ்குமாா், ஈ.மணி(கா்தாா்) உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.