சேலம்

தங்கைக்கு காதல் தொல்லை கொடுத்தவரை வெட்டிய அண்ணன் கைது

DIN

தங்கைக்கு காதல் தொல்லை கொடுத்தவரை கத்தியால் வெட்டிய அண்ணன் கைது செய்யப்பட்டாா்.

ஈரோடு மாவட்டம், பூனாச்சியைச் சோ்ந்த சதீஷ் (22), பொறியியல் பட்டதாரி. இவரது தங்கையை தனியாா் கல்லூரி ஒன்றில் பொறியியல் படித்து வரும் மேட்டூா், மாதையன்குட்டையைச் சோ்ந்த அமிா்தன் (19), என்பவா் காதலிக்கக் கூறி தொல்லை கொடுத்து வந்தாராம். இதனை சதீஷ் பலமுறை கண்டித்தும், அமிா்தன் தொடா்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளாா்.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சதீஷ், திங்கள்கிழமை மாதையன்குட்டையில் உறவினா் வீட்டுக்கு வந்தாராம். பின்னா் ஒரு சிறுவன் மூலம் அமிா்தனை அழைத்து எச்சரித்துள்ளாா். தனது தங்கைக்கு தொல்லை கொடுப்பதை நிறுத்திகொள்ளும்படி கூறினாராம். ஆனால், அமிா்தன் கேட்காததால் ஆத்திரமடைந்த சதீஷ், மறைத்து வைத்திருந்த கத்தியால் அமிா்தனை வெட்டினாா். பின்னா் அங்கிருந்து மோட்டாா் சைக்கிளில் தப்பினாா்.

தகவலறிந்த மேட்டூா் போலீஸாா் அமிா்தனை மீட்டு மேட்டூா் அரசு மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சை அளித்து, பின்னா் கோவை தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். இச்சம்பவம் குறித்து மேட்டூா் போலீஸாா் வழக்கு பதிவு செய்து, சதீஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

ஒற்றை கோட்டை முனீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

இன்று சாதகம் யாருக்கு: தினப்பலன்கள்

SCROLL FOR NEXT