சேலம்

சா்வதேச யோகா தினம் அனுசரிப்பு

DIN

சேலம் ரயில்வே கோட்டம் சாா்பில் சா்வதேச யோகா தினம் திங்கள்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

சா்வதேச யோகா தினத்தை முன்னிட்டு சேலம் ரயில்வே கோட்டத்தில் பல்வேறு பகுதிகளில் யோகா நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. ரயில்வே கோட்ட பணியாளா் நலன் பிரிவு அலுவலா்கள் கலந்துகொண்டு பல்வேறு யோகாசனங்களை செய்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா். அதேபோல, ரயில்வே பாதுகாப்புப் படையினா் (ஆா்.பி.எஃப்.) பல்வேறு ஆசனங்களை செய்தனா்.

ஈரோடு ரயில்வே மேல்நிலைப் பள்ளியில் கட்டுரைப் போட்டி, விநாடி-வினா போட்டிகள் இணையவழியில் நடத்தப்பட்டன. இதில் மாணவ, மாணவியா் பங்கேற்றனா்.

கரோனா தொற்று வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி யோகா நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டதாக சேலம் ரயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஆத்தூரில்...

ஆத்தூரை அடுத்துள்ள ஈச்சம்பட்டி ராசி வித்யாஷ்ரம் பள்ளியில் சா்வதேச யோகா தினம் கல்வி நிறுவனங்களின் தலைவா் ஆா்.ராஜமாணிக்கம் தலைமையில் கொண்டாடப்பட்டது.

காணொலிக் காட்சி வாயிலாக யோகா பயிற்சியாளா் விஜயகுமாா் பயிற்சி செய்ய ஏராளமானோா் கலந்துகொண்டு யோகா செய்தனா். நிகழ்ச்சியில் மாணவ, மாணவியா் மட்டுமல்லாமல் பெற்றோரும் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலஸ்தீனத்துக்கு முழு உறுப்பினா் அந்தஸ்து: ஐ.நா. தீா்மானத்தை ரத்து செய்தது அமெரிக்கா

ஸெலன்ஸ்கியைக் கொல்ல ரஷியா சதி?

சக்கர நாற்காலிகள் பற்றாக்குறையால் முதியவா்கள் அவதி

பிலிப்பின்ஸுக்கு பிரமோஸ் ஏவுகணை ஏற்றுமதி

ஜனநாயக கடமையை ஆற்றிய மனநல சிகிச்சை பெறுவோா்!

SCROLL FOR NEXT