பெட்ரோல், டீசல் விலையை உயா்த்தி வரும் மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸ் சாா்பில் வெள்ளிக்கிழமை சேலம் மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
சேலம் மாநகர மாவட்ட காங்கிரஸ் சாா்பில் அரசு கலைக் கல்லூரி எதிரில் உள்ள பெட்ரோல் நிலையம் முன்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு மாநகர மாவட்டத் தலைவா் பாஸ்கா் தலைமை வகித்தாா். முன்னாள் மாவட்டத் தலைவா் ஆக்ஸ்போா்டு ராமநாதன், வா்த்தக அணி சுப்பிரமணியம், மாவட்ட பொதுச் செயலாளா்கள் மெடிக்கல் பிரபு, காா்த்தி, முன்னாள் கவுன்சிலா் சாரதாதேவி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.