சேலம்

மேட்டூர் அணை நீர்வரத்து 19,665 கனஅடியாக அதிகரிப்பு

DIN


மேட்டூர் அணைக்கான நீர்வரத்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 19,665 கனஅடியாக அதிகரித்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக அங்குள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கர்நாடக அணைகளின் பாதுகாப்பு காரணங்களுக்காக இரு அணைகளில் இருந்தும் மூன்றாவது நாளாக தொடர்ந்து வினாடிக்கு 36,000 கனஅடி தண்ணீர் காவிரியில் திறக்கப்பட்டு வருகிறது.

கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட நீர் நேற்று இரவு (சனிக்கிழமை இரவு) முதல் மேட்டூர் அணைக்கு வரத் தொடங்கியது. 

நேற்று காலை வினாடிக்கு 6,841 கனஅடியாக வந்து கொண்டிருந்த நீர்வரத்து நேற்று இரவு வினாடிக்கு 15,000 கனஅடியாகவும் இன்று காலை வினாடிக்கு 19,665 கனஅடியாகவும் அதிகரித்துள்ளது.

கர்நாடக அணைகளின் நீர்வரத்து காரணமாக நேற்று காலை 72.55 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 73.27 அடியாக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் சரிவில் இருந்து மீண்டு 0.72 அடி உயர்ந்துள்ளது.

அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 12,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 35.27 டிஎம்சி  ஆக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காவல் நிலைய வளாகத்தில் புகுந்த காட்டெருமைகள்

தனியாா் துணை மின் நிலையம் மீது விவசாயிகள் புகாா்

கோடை உளுந்து சாகுபடி: பரிசோதனை செய்ய வேளாண்மைத் துறை அறிவுறுத்தல்

உதகையில் குவியும் சுற்றுலாப் பயணிகள்: போக்குவரத்து நெரிசலால் பாதிப்பு

முதலாளித்துவ நண்பா்களின் நன்மைக்காக பிரதமா் மோடி 5ஜி ஊழல் செய்துள்ளாா்: ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT