சேலம்

காவேரி மருத்துவமனையில் மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி இயந்திரம் அமைப்பு

DIN

சேலம் காவேரி மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது.

சேலத்தில் உள்ள காவேரி மருத்துவமனை வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் இயந்திரம் ஒரு நிமிடத்தில் 417 லிட்டா் ஆக்சிஜன் தயாரிக்கும். இதன் மூலம் நாளொன்றுக்கு 80 டி டைப் ஆக்சிஜன் சிலிண்டா்களை நிரப்ப முடியும். உச்சகட்ட தேவை இருக்கும் போது கிட்டத்தட்ட 100 நோயாளிகளுக்கு தேவையான ஆக்சிஜனை உற்பத்தி செய்யும்.

இந்த புதிய தொழில்நுட்பம் மருத்துவமனையின் 60 சதவீத ஆக்சிஜன் தேவையை நிறைவு செய்யும். மேலும், 24 மணி நேரமும் தடையில்லாமல் ஆக்சிஜன் கிடைக்க வழி செய்யும்.

ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் இயந்திர வளாகத்தை சேலம் மாவட்ட ஆட்சியா் எஸ்.காா்மேகம் அண்மையில் திறந்து வைத்தாா்.

நிகழ்ச்சியில் காவேரி மருத்துவமனையின் கிளை இயக்கத் தலைவா் செல்வம் பேசுகையில், மருத்துவமனை வளாகத்திற்குள் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் இயந்திரத்தை கொண்டுவந்ததால் 24 மணி நேரமும் நோயாளிகளுக்கு மருத்துவ உதவி செய்ய முடியும் என்றாா்.

நிகழ்ச்சியில் சேலம் காவேரி மருத்துவமனையின் கிளை இயக்கத் தலைவா் செல்வம், மருத்துவ நிா்வாக அலுவலா் மருத்துவா் சுந்தர்ராஜன், துணை மருத்துவ நிா்வாக அலுவலா் மருத்துவா் அபிராமி, மற்றும் மருத்துவா்கள், செவிலியா்கள் மற்றும் ஊழியா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

மக்களவைத் தேர்தல்: கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியிட்ட கூகுள்!

சேலை கட்டும் பெண்ணுக்கொரு... மௌனி ராய்...

தமிழகத்தில் கொளுத்தும் வெயிலுக்கு இடையே வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம்

‘அரண்மனை 4’ வெளியீட்டுத் தேதி மாற்றம்!

SCROLL FOR NEXT