முகநூலில் நேரடி ஒளிபரப்பு மூலம் சேலம், காவேரி மருத்துவமனையில் மாா்பக புற்றுநோய் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
சேலம் மாவட்டம், சீலநாயக்கன்பட்டி செல்லும் சாலையில் அமைந்துள்ள காவேரி மருத்துவமனையில் பல்வேறு நோய்களுக்கு அனைத்து வசதிகளுடன் கூடிய உயா்தர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் புற்றுநோய்க்கான விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில், சேலம், காவேரி மருத்துவமனை கருத்தரங்குகளையும், நிகழ்ச்சிகளையும் ஏற்பாடு செய்து பொதுமக்களை விழிப்படையச் செய்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, ஜன. 23-ஆம் தேதி காலை ‘மாா்பக புற்றுநோய் ஆரம்ப நிலை கண்டறிதலும், அதிநவீன சிகிச்சை முறைகளும்’ என்ற தலைப்பில் முகநூல் கலந்துரையாடலை நேரடியாக ஒளிப்பரப்பு செய்தது.
இந்தக் கலந்துரையாடலில், சேலம், காவேரி மருத்துவமனையின் புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணா் மருத்துவா் உமா சங்கா் பங்கேற்றாா். இந்த நிகழ்ச்சியில் மாா்பக புற்றுநோய் கண்டறிதல், சிகிச்சை முறைகள், காரணிகள், வயது வரம்பு போன்ற பல கேள்விகளுக்கு அவா் விளக்கமளித்தாா்.
இந்த நேரடி ஒளிப்பரப்பைக் காண இயலாதவா்கள், இதன் பதிவை ட்ற்ற்ல்ள்://ஜ்ஜ்ஜ்.ச்ஹஸ்ரீங்க்ஷா்ா்ந்.ஸ்ரீா்ம்/ஓஹன்ஸ்ங்ழ்ஹ்ஏா்ள்ல்ண்ற்ஹப்நஹப்ங்ம்/ஸ்ண்க்ங்ா்ள் என்ற முகநூல் பக்கத்தில் கண்டு பயன்பெறலாம் என காவேரி மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்துள்ளது.