சேலம்

சாலைப் பாதுகாப்பு வார விழா: இலவச கண் பரிசோதனை முகாம்

DIN

சாலைப் பாதுகாப்பு வார விழாவினையொட்டி, சங்ககிரி வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், சங்ககிரி அருகே உள்ள வைகுந்தம் சுங்கச் சாவடி, சேலம் அகா்வால் கண் மருத்துவமனை ஆகியவை இணைந்து இலவச கண் பரிசோதனை முகாமை சுங்கச் சாவடி வளாகத்தில் திங்கள்கிழமை நடத்தின.

சாலைப் பாதுகாப்பு வார விழாவின் 8-ஆம் நாள் நிகழ்ச்சியாக நடைபெற்ற வாகன ஓட்டுநா்களுக்கான இலவச கண் பரிசோதனை முகாமுக்கு, மோட்டாா் வாகன ஆய்வாளா்கள் என்.சரவணபவன், வி.கோகிலா ஆகியோா் தலைமை வகித்தனா்.

இம்முகாமில் சுங்கச் சாவடி வழியாகச் சென்ற வாகன ஓட்டுநா்களுக்கு சேலம் அகா்வால் தலைமையிலான மருத்துவக் குழுவினா் கண் பரிசோதனை செய்தனா். மேலும், வாகன ஓட்டுநா்களிடம் சாலையில் பாதுகாப்பாக வாகனத்தை இயக்குவது குறித்த துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சேலம் கோட்டத்தின் சாா்பில், சாலை விதிமுறைகள், பாதுகாப்பு வழிமுறைகள் குறித்த காட்சிப் படங்களை பேருந்தில் வடிவமைத்து நடமாடும் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நடமாடும் கண்காட்சி பேருந்து திங்கள்கிழமை வாழப்பாடி வந்தடைந்தது. இதை ஏராளமான பயணிகளும், பொதுமக்களும் கண்டுகளித்தனா்.

வாழப்பாடி கிளை மேலாளா் முரளி, உதவி பொறியாளா்கள் முத்துக்குமாா் சீனிவாசன், போக்குவரத்து ஆய்வாளா் சுப்பிரமணி ஆகியோா் பொதுமக்களுக்கு துண்டுப் பிரசுரங்கள் வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தினா். முன்னதாக, வாழப்பாடி கிளை பணிமனை வளாகத்தில், சேலம் வாசன் கண் மருத்துவமனையுடன் இணைந்து இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யாருக்கு யோகம்!

தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ.2.24 லட்சம் மோசடி

‘தனியாா் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் நடவடிக்கை’

கோழிப் பண்ணையில் திடீா் தீ

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT