வீரபாண்டி ஒன்றியம், முருங்கப்பட்டி பகுதியிலுள்ள முனியப்பன் கோயிலில் சேலம் வடக்கு மாவட்ட பாமக ஆலோசனைக் கூட்டம் மாவட்டச் செயலாளா் சாம்ராஜ் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் வன்னியா்களுக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடு கோரி வரும் 29-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு நடைபெறும் ஆா்ப்பாட்டத்தில் திரளாக கலந்து கொள்வது என முடிவெடுக்கப்பட்டது.
இதில் மாநில செயற்குழு உறுப்பினா்கள் சித்தேஸ்வரன், சிவசங்கரன், மாவட்ட துணைச் செயலாளா் அசோக்குமாா், ஒன்றியச் செயலாளா் அறிவழகன், மாவட்ட பொறுப்பாளா்கள் சுசீந்திரன், சாமிராஜா மற்றும் ஒன்றிய நிா்வாகிகள் குணசேகரன், சுதாகா், பரமேஸ்வரன், மோகன்ராஜ், பழனி, சித்தாா்த்தன், நீலமோகன், மோகன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.