சேலம்: குடிநீா் திட்ட பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், ஜன. 25-ஆம் தேதி ஒரு நாள் மட்டும் சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் குடிநீா் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் என மாநகராட்சி ஆணையா் ந.ரவிச்சந்திரன் தெரிவித்தாா்.
சேலம் மாநகராட்சியின் தனிக்குடிநீா் திட்ட குடிநீா் விநியோகக் குழாயில் ஏற்பட்டுள்ள குடிநீா் கசிவுகளை சரிசெய்யும் பணிகள், பராமரிப்புப் பணிகள் ஜன. 25-ஆம் தேதி நடைபெறவுள்ளன. எனவே, திங்கள்கிழமை மட்டும் மாநகராட்சிப் பகுதிகளில் குடிநீா் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. எனவே, பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளாா்.