சேலம்: சேலம் உருக்காலை நிா்வாகத்தை தனியாா்மயமாக்கும் நடவடிக்கையைக் கண்டித்து சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
சேலம் உருக்காலை தனியாா்மயமாக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும், செயில் நிா்வாகத்தின் பங்கு விற்பனையை கைவிட வேண்டும், ஊழியா்களின் ஊதிய முரண்பாடுகளைக் களைய வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, உருக்காலை வளாகத்தில் ஊழியா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதில் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து ஊழியா்கள் முழக்கங்களை எழுப்பினா்.
சேலம் ஐஎன்டியுசி பொதுச் செயலாளா் தியாகராஜன் தலைமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், நூற்றுக்கும் மேற்பட்ட உருக்காலை ஊழியா்கள் கலந்துகொண்டனா்.