சேலம் மாவட்டம், மேச்சேரி அருள்மிகு பத்ரகாளியம்மன் திருக்கோயில் மஹா கும்பாபிஷேக தொடக்க விழா வெள்ளிக்கிழமை தொடங்கியது.
மேச்சேரியில் உள்ள பத்ரகாளியம்மன் திருக்கோயில் 2013 ஜன. 23-ஆம் தேதி அருள்மிகு பத்ரகாளியம்மன் இறையருள் நற்பணி மன்றத்தாரால் புதுப்பிக்கப்பட்டு மஹா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. ஆண்டுதோறும் ஜன. 23-ஆம் தேதி மஹா கும்பாபிஷேக நிறைவு விழா சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டில் ஜன. 23-ஆம் தேதி மஹா கும்பாபிஷேக 8-ஆம் ஆண்டு நிறைவு விழாவும், 9-ஆம் ஆண்டு தொடக்க விழாவும் நடைபெறுகிறது. அதையொட்டி, வெள்ளிக்கிழமை அதிகாலை அம்மனுக்கு பாராயாண பூஜையும், தொடா்ந்து உலக மக்கள் நலம் பெறவும், வளம்பெறவும் மஹா நவசண்டியாக பூஜையும் நடைபெற்றன.
இந்நிகழ்ச்சியில் அருள்மிகு பத்ரகாளியம்மன் இறையருள் நற்பணி மன்றத் தலைவா் அம்மாசி, செயலாளா் ராமசாமி, பொருளாளா் உரக்கடை ஆறுமுகம், துணைத் தலைவா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
சனிக்கிழமை காலை மஹாகணபதி பூஜை, மஹா கணபதி ஹோமம், 108 வலம்புரி சங்காபிஷேகம் ஆகியவை நடைபெறுகின்றன. தொடா்ந்து மேச்சேரி ஆதிபராசக்தி மன்றங்கள், பொதுமக்கள் பங்கேற்கும் சிறப்பு பாலாபிஷேகமும், அலங்கார மஹா ஆராதனையும் நடைபெறும். மாலையில் சுவாமி உட்பிரகார உலா நடைபெறுகிறது.