கெங்கவல்லி அருகே வலசக்கல்பட்டி ஏரியில் குளிக்கச் சென்ற முதியவரும், சிறுமியும் நீரில் மூழ்கி உயிரிழந்தனா்.
சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே வலசக்கல்பட்டி ஏரி நிரம்பி வழிகிறது. இந்த ஏரியில் ஆத்தூா், பைத்தூரைச் சோ்ந்த மின்வாரியத்தில் பணியாற்றும் அண்ணாமலை (53) ஆழமான பகுதிக்குச் சென்று குளித்தபோது நீரில் மூழ்கி இறந்தாா். அவரது உடல் மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்காக, ஆத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
அதேபோல கெங்கவல்லி அருகே கடம்பூரில் கூலமேடு செல்லும் வழியில் செங்கல் சூளையில் பணியாற்றும் செந்தில் மகள் தேவி (11), கடம்பூரிலுள்ள அரசு தொடக்கப் பள்ளியில் 5ஆம் வகுப்பு படித்து வந்தாா். இவா் தனது பாட்டி சின்னபாப்பா, மாமா செல்வராஜ், உறவினா் தீபா (11)ஆகியோருடன் ஏரி உபரி நீா் வெளியேறும் இடத்தில் குளித்துள்ளாா்.
அப்போது தீபாவும், தேவியும் நீச்சல் பழகியுள்ளனா். இவா்கள் இருவரும் ஆழமான பகுதிக்கு சென்ால் இருவரும் நீரில் மூழ்கியுள்ளனா்.அதில் தீபாவை அருகில் இருந்தவா்கள் காப்பாற்றினா். ஆனால் தேவி நீரில் மூழ்கி உயிரிழந்தாா். இந்தச் சம்பவங்கள் குறித்து கெங்கவல்லி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.