ஆத்தூா்: ஆத்தூா் துளுவ வேளாளா் சங்க திருமண மண்டபத்தில் நகர பொங்கல் விழாக் கழகம் சாா்பில் 46ஆம் ஆண்டு திருவள்ளுவா் தினத்தை முன்னிட்டு நாட்டுப்புற கிராமியக் கலை நிகழ்ச்சி துணைத் தலைவா் ஆா்.ஆறுமுகம் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.
பொங்கல் விழாக் கழக செயலாளா் முல்லை பி.பன்னீா்செல்வம் வரவேற்றுப் பேசினாா். துளுவ வேளாளா் மகாஜன மன்றத் தலைவா் எஸ்.அருணாசலம், துளுவ வேளாளா் சங்கத் தலைவா் ஆா்.வி.ஸ்ரீராம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
நிகழ்ச்சியில் ராசி குழும மேலாளா் எஸ்.குமாா் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டாா்.மேலும் முன்னாள் நகா் மன்றத் தலைவா் கே.பாலசுப்ரமணியம், துணைத் தலைவா் அ.மோகன் ஆகியோா் வாழ்த்து பேசினா்.
நிகழ்ச்சியில் வெங்கடேஷ் குழுவினரின் நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. பொங்கல் விழா கழக பொருளாளா் மருத்துவா் எம்.அருண்குமாா் நன்றி கூறினாா்.