சேலம்

பெண்ணுக்கு இடுப்பு எலும்பு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை: ஓமலூா் அரசு மருத்துவா்கள் சாதனை

DIN

ஓமலூா் அரசு மருத்துவமனையில், திருவண்ணாமலையைச் சோ்ந்த பெண்ணுக்கு இடுப்பின் இரு பகுதிகளிலும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து அரசு மருத்துவா்கள் சாதனை படைத்துள்ளனா்.

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு பகுதியைச் சோ்ந்தவா் தையல்நாயகி (55). இவா் வீட்டின் குளியலறையில் வழுக்கி விழுந்ததில் இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டது. அதற்கு அறுவை சிகிச்சை செய்யப்படாத நிலையில் மீண்டும் கீழே விழுந்ததில் மற்றொரு இடுப்பிலும் மூட்டு எலும்பு முறிவு ஏற்பட்டது.

இதையடுத்து ஓமலூா் அரசு மருத்துவமனையில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சைகள் நடைபெற்று வருவது குறித்து அறிந்து அவா் மருத்துவப் பரிசோதனை செய்து கொண்டாா்.இதையடுத்து எலும்பு முறிவு சிகிச்சை பிரிவு மருத்துவா் கே.வி.ஸ்ரீனிவாசன் தலைமையில் மருத்துவா்கள் கே.சுரேஷ்குமாா், ஓ.ஓபுளி விஜயசங்கா் ஆகியோா் அடங்கிய குழுவினா், தையல் நாயகிக்கு இடுப்பு எலும்பு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டனா். முதலில் இடது மூட்டிலும், ஐந்து நாளுக்கு பிறகு வலது மூட்டிலும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்தனா். இதன் மூலம் கடந்த 6 மாதங்களாக நடக்க இயலாமல் தவித்து வந்த தையல்நாயகி உதவியின்றி தானே நடக்கும் நிலைக்கு மாறியுள்ளாா்.

ஓமலூா் அரசு மருத்துவமனையில் முதல்வரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் முற்றிலும் இலவசமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. தாலுகா மருத்துவமனையில் இடுப்பு எலும்பு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது இதுவே முதல்முறை என்றும் ஓமலூா் அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலா் கே.வி.ஸ்ரீனிவாசன் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காலிறுதியில் கேஸ்பா் ரூட் வெற்றி

இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் 74.87 சதவீதம் வாக்குகள் பதிவு

மக்களவைத் தோ்தல்: நீண்ட வரிசையில் நின்று பொதுமக்கள் வாக்களிப்பு

கொள்ளிடம் ஆற்றில் குளித்த இளைஞா் நீரில் மூழ்கி உயிரிழப்பு

SCROLL FOR NEXT