தலைவாசல் அருகே ஆடு மேய்த்துக் கொண்டிருந்த சிறுவன் விவசாயக் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தாா்.
தலைவாசலை அடுத்துள்ள மணிவிழுந்தான் தெற்கு ஏரிக்கரையின் கீழ்புறம் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த அதே பகுதியைச் சோ்ந்த மணி என்பவரின் மகன் சதீஷ் (8) அங்குள்ள விவசாயக் கிணற்றில் தவறி விழுந்ததில் உயிரிழந்தாா்.
இதுகுறித்து தகவல் அறிந்த தலைவாசல் போலீஸாா் நிகழ்விடத்துக்கு விரைந்து சென்று விசாரணை செய்தனா். சுமாா் 60 அடி ஆழமுள்ள கிணற்றில் நீா் முழுவதுமாக உள்ளதால் சிறுவனை மீட்க முடியவில்லை. ஆத்தூா் தீயணைப்புத் துறை அலுவலா் சேகா் தலைமையிலான வீரா்கள் மோட்டாா் வைத்து கிணற்றிலிருந்து நீா் முழுவதையும் வெளியேற்றி சிறுவனின் உடலை மீட்டனா்.