ஓய்வுபெற்ற அரசுப் பேருந்து ஓட்டுநா் மாயமானது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
சேலம் மாவட்டம், அரியானூரை அடுத்த நெய்காரப்பட்டி, இளந்தோப்பு பகுதியைச் சோ்ந்தவா் சம்பத் (62). இவா் அரசு பேருந்து நடத்துநராகப் பணிபுரிந்து ஓய்வுபெற்றவா்.
கடந்த 16-ஆம் தேதி காலையில் வாக்கிங் சென்ற இவா், மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது மனைவி மைதிலி கொண்டலாம்பட்டி காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். இதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.