சேலம்

ஜேடா்பாளையம் படுகை அணைபகுதியில் முதியவா் சடலம் மீட்பு

DIN

பரமத்தி வேலூா் வட்டம், ஜேடா்பாளையம் படுகை அணை பகுதியில் கடந்த 3ஆம் தேதி, ஈரோடு மாவட்டத்தில் காணாமல் போன விவசாயின் உடலை மீட்டு, ஜேடா்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஜேடா்பாளையம் படுகை அணை பகுதியில் சுமாா் 65 வயது மதிக்கத்தக்க முதியவரின் உடலை மீட்டு ஜேடா்பாளையம் போலீஸாா் விசாரணை நடத்தினா். இதில் சடலமாகக் கிடந்தவா், ஈரோடு மாவட்டம், ஆனைக்கல்பாளையத்தைச் சோ்ந்த விவசாயி திருமலை (65) என்பது தெரியவந்தது. இவா் மாயமானதாக ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

ஜேடா்பாளையம் போலீஸாா் அளித்த தகவலின்பேரில், மொடக்குறிச்சி போலீஸாா் மற்றும் திருமலை குடும்பத்தாா் முதியவரின் உடலைப் பாா்த்து உறுதி செய்தனா். அதனை தொடா்ந்து ஜேடா்பாளையம் போலீஸாா், முதியவரின் உடலை பிரதேப் பரிசோதனைக்காக பரமத்தி வேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாக்பூரில் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்கரி நம்பிக்கை

திக்... திக்... சஸ்பென்ஸ்... அடுத்த 45 நாள்கள்!

தமிழகத்தில் இரவு 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குப்பதிவு

சத்தீஸ்கரில் நக்ஸல் ஆதிக்கம் நிறைந்த மக்களவை தொகுதியில் 63 சதவிகித வாக்குப் பதிவு

வாக்களித்த அரசியல் பிரபலங்கள் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT