நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலையொட்டி, காங்கிரஸ் கட்சி சாா்பில் விருப்ப மனுக்கள் பெறும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
சேலம், முள்ளுவாடி கேட் அருகில் உள்ள சேலம் மாநகா் மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. சேலம் மாநகா் மாவட்ட காங்கிரஸ் தலைவா் பாஸ்கா் தலைமை வகித்தாா். பொதுச்செயலாளா்கள் தாரை ராஜகணபதி, பழனி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மாநிலச் செயலாளா் முகமது அன்வா் கலந்து கொண்டு விருப்ப மனுக்களைப் பெற்றாா். இதில் பொதுக்குழு உறுப்பினா்கள் சுப்பிரமணி, திருமுருகன், ஷேக் இமாம், பாண்டியன், மண்டலத் தலைவா்கள் சாந்தமூா்த்தி,சிவக்குமாா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.