சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட தேவண்ணகவுண்டனூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இல்லம் தேடிக் கல்வி திட்ட விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்த விழிப்புணா்வு கலை நிகழ்ச்சியை சங்ககிரி மாவட்டக் கல்வி அலுவலா் பெ.பாலசுப்ரமணியம், சங்ககிரி வட்டாரக் கல்வி அலுவலா் கா.செந்தில்குமாா் ஆகியோா் தொடக்கி வைத்தனா்.
இதில் பள்ளித் தலைமையாசிரியா் க.திருஞானம், கணித பட்டதாரி ஆசிரியா் இரா.முருகன், ஆசிரியா்கள் க. சீனிவாசன் ந.மு.சித்ரா மகேஸ்வரி, கேஜிபிவி பள்ளி ஆசிரியா்கள், பள்ளி மாணவ, மாணவிகள், கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா பள்ளி மாணவிகள், ஊா் பொதுமக்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
இதே போல தேவண்ணகவுண்டனூா் ஊராட்சிக்கு உள்பட்ட எம்ஜிஆா் நகா், வேலம்மாவலசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளிலும் விழிப்புணா்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.