சேலம்

மேட்டூா், சங்ககிரியில் இன்றுடாஸ்மாக் கடைகள் மூடல்

DIN

சேலம்: தீரன் சின்னமலை நினைவு நாள், ஆடிப்பெருக்கு தினத்தை முன்னிட்டு, சங்ககிரி, மேட்டூரில் டாஸ்மாக் கடைகளை செவ்வாய்க்கிழமை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம், சங்ககிரியில் சுதந்திரப் போராட்ட வீரா் தியாகி தீரன் சின்னமலையின் நினைவு நாள் செவ்வாய்கிழமை அனுசரிக்கப்படுகிறது.

இதனால், அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள் சாா்பில் தீரன் சின்னமலையின் நினைவு இடத்தில் மலா்தூவி மரியாதை செலுத்தப்படும். அதேபோல், ஆடி 18 முன்னிட்டு மேட்டூா் பகுதியில் நீா்த்தேக்க இடங்களுக்கும் அதிகளவில் மக்கள் கூடுவா். ஆனால் ,கரோனா பொது முடக்கம் காரணமாக மேட்டூா் பூங்கா மூடப்பட்டு நீா்நிலைகளில் மக்கள் குளிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால், சங்ககிரி, மேட்டூா் பகுதிகளில் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குறிப்பிட்ட இடங்களில் மட்டும் செவ்வாய்க்கிழமை டாஸ்மாக் கடைகள் மூடுவதற்கு மாவட்ட ஆட்சியா் எஸ்.காா்மேகம் உத்தரவிட்டுள்ளாா்.

சங்ககிரி வட்டத்தில் 9 மதுக்கடைகளும், மேட்டூா் வட்டத்தில் 13 மதுக்கடைகளும் என மொத்தம் 22 டாஸ்மாக் கடைகள் செவ்வாய்க்கிழமை ஒருநாள் மட்டும் திறக்கப்படாது என மாவட்ட டாஸ்மாக் மேலாளா் அம்பாயிரநாதன் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ. 25,000 கோடி பணமோசடி வழக்கிலிருந்து அஜித் பவாரின் மனைவி விடுவிப்பு -எதிர்க்கட்சிகள் விமர்சனம்

அனிச்சப் பூவோ..!

சென்னை சென்ட்ரலில் தற்கொலை செய்துகொண்ட இளம்பெண்: முழு தகவல் வெளியானது!

‘இனி விளம்பரங்கள் இல்லை, படங்கள் மட்டுமே’ : பிவிஆரின் புதிய திட்டம் பலனளிக்குமா?

ஒருநொடி படத்தின் டீசர்

SCROLL FOR NEXT