சேலம்

கணவரை கொலை செய்த ஆசிரியை மீது நடவடிக்கை கோரி சாலை மறியல்

DIN

வாழப்பாடி: வாழப்பாடி அருகே கணவரை கொலை செய்த அரசுப் பள்ளி ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, கொலையுண்ட இளைஞரின் உறவினா்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

வாழப்பாடியை அடுத்த அத்தனூா்பட்டி கிராமத்தைச் சோ்ந்த மணிகண்டன் (35), 11 ஆண்டுகளுக்கு முன் பேளூரைச் சோ்ந்த இளமதி (30) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டாா். வாழப்பாடியை அடுத்த வி.மன்னாா்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இளமதி பட்டதாரி ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறாா். இத்தம்பதியருக்கு 10 வயதில் ஒரு மகனும், 6 வயதில் ஒரு மகளும் உள்ளனா்.

சென்னையில் பூம்புகாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த மணிகண்டன் பணி நீக்கம் செய்யப்பட்டதால், மதுப்பழக்கத்துக்கு ஆளானாா். அடிக்கடி மது போதையில் வீட்டுக்குச் சென்று மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளாா்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை மதுபோதையில் சென்ற மணிகண்டன், இளமதியிடம் தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த இளமதி, தனது கணவா் மணிகண்டனை உருட்டுக் கட்டையால் கடுமையாகத் தாக்கியுள்ளாா். இதில் பலத்த காயமடைந்த மணிகண்டன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். வாழப்பாடி காவல் ஆய்வாளா் சுகுமாா் தலைமையிலான போலீஸாா் மணிகண்டனின் உடலைக் கைப்பற்றி, இளமதியிடம் விசாரணை நடத்தி வந்தனா்.

இந்நிலையில், கணவரை அடித்துக் கொலை செய்த அரசுப் பள்ளி ஆசிரியை, அவருக்கு துணையாக இருந்தவா்கள் மீது வாழப்பாடி போலீஸாா் துரித நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்த மணிகண்டனின் உறவினா்கள், அத்தனூா்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே பேளூா் சாலையில் திங்கள்கிழமை காலை சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையடுத்து, வாழப்பாடி போலீஸாா், வருவாய்த் துறையினா் மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, ஆசிரியை இளமதியை கைது செய்து சிறையில் அடைப்பதாக உறுதியளித்தனா். இதனையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது. இதனையடுத்து, ஆசிரியை இளமதியை திங்கள்கிழமை மாலை கைது செய்த வாழப்பாடி போலீஸாா், சேலம் பெண்கள் கிளைச் சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வைரலாகும் அருண் விஜய்யின் 'ரெட்ட தல' போஸ்டர்!

கடலூர் அருகே அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச்சு: 4 பேர் கைது

வாழப்பாடி அருகே 3 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து!

ரூ.1,40,000 சம்பளத்தில் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை வேண்டுமா?

திருவண்ணாமலையில் நெரிசல்: பக்தர்கள் கடும் அவதி!

SCROLL FOR NEXT