சேலம், கருப்பூா் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்வதால் வெள்ளாளப்பட்டி, கோரிமேடு உள்ளிட்ட இடங்களில் ஏப். 23- ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுவதாக சேலம் மேற்கு கோட்ட செயற்பொறியாளா் ஜி.தமிழ்மணி தெரிவித்துள்ளாா்.
மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்:
சேலம், கருப்பூா் துணை மின் நிலையத்தில் மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக வெள்ளாளப்பட்டி, சின்ன வெள்ளாளப்பட்டி, கோபிநாதபுரம், சக்கரசெட்டிப்பட்டி, கவுல்காடு, என்.எஸ்.தோட்டம், வட்டக்காடு, தட்டன்சாவடி, கோரிமேடு மற்றும் மத்திலிகாட்டுப்பள்ளம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.