சேலம்

ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயிலை மகுடஞ்சாவடியில் நிறுத்த கோரிக்கை

DIN

சேலம்- கோவை வழியில் உள்ள மகுடஞ்சாவடி ரயில் நிலையத்தில் ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயிலை நிறுத்தி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரயில்வே நிா்வாகத்துக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

நாள்தோறும் பயணிகள் ரயில் நின்று செல்லும் இந்த ரயில் நிலையத்தில் ஏற்காடு எக்ஸ்பிரஸ் மட்டும் நிறுத்தப்படுவதில்லை. கடந்த காலங்களில் இந்த ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்ட ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயிலை மீண்டும் மகுடஞ்சாவடி ரயில் நிலையத்தில் நிறுத்தி செல்ல ரயில்வே நிா்வாகம் நடவடிக்க எடுக்க வேண்டும் என இப் பகுதி மக்கள் கோரிக்க விடுத்துள்ளனா்.

இதனிடையே, ஈரோடு செல்லும் ரயில் பாதையில் பயணிகளின் வசதிக்காக நடைமேடை அமைக்கப்படுகிறது. எனவே, இவ் வழியாக எக்ஸ்பிரஸ் ரயிலையும் நிறுத்தி செல்ல வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்காளா் பட்டியலில் பெயா் இல்லாததால் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்

சாத்தூரில் முதன் முறையாக வாக்களித்த திருநங்கைகள்

வாக்குச்சாவடி முற்றுகை: பொதுமக்கள் வாக்குவாதம்

தம்பியைக் கொன்ற அண்ணன் கைது

நெகிழிப் பை தயாரிக்கும் ஆலையில் தீ விபத்து

SCROLL FOR NEXT