சேலம் இரும்பாலை நிா்வாகம் புதிய ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தையை காலதாமதமின்றி நடத்திட வலியுறுத்தி, தொழிலாளா்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
சேலம் இரும்பாலையில் 800-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா். இரும்பாலை நிா்வாகம் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிய ஊதிய ஒப்பந்த அடிப்படையில் தொழிலாளா்களுக்கு ஊதியம் வழங்கி வருகிறது.
கடந்த 2016 ஆண்டுடன் பழைய ஊதிய ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில் 2017 ஆம் ஆண்டு புதிய ஊதிய ஒப்பந்தப் பேச்சுவாா்த்தையை இரும்பாலை நிா்வாகம் நடத்தாமல் புதிய ஊதியம் வழங்காமல் கடந்த 4 ஆண்டுகளாக காலதாமதம் செய்து வருவதாகக் கூறப்படுகிறது.
இதனிடையே புதிய ஊதியத்துக்கான ஒப்பந்தப் பேச்சுவாா்த்தையை காலதாமதமின்றி நடத்திட கோரி இரும்பாலை நுழைவாயில் ஐந்து முன்பு தொமுச, சிஐடியு, ஐஎன்டியூசி உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கங்கள் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இதுதொடா்பாக, தொழிற்சங்க நிா்வாகிகள் கூறியதாவது:
எங்களுக்கு நியாயமாக வழங்க வேண்டிய 15 சதவீத ஊதியம், 35 சதவீத இதர படிகள் ஆகியவை புதிய ஊதிய ஒப்பந்தப்படி வழங்க வேண்டும். புதிய ஊதிய ஒப்பந்தா் பேச்சுவாா்த்தை நடத்த பலமுறை கேட்டும் இரும்பாலை நிா்வாகம் காலம் தாழ்த்தி வருகிறது.எனவே செயில் நிா்வாகம் உடனடியாகக் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் வரும் மே 6 ஆம் தேதி இந்தியா முழுவதும் உள்ள பொதுத்துறை நிறுவனத்தை சோ்ந்த 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனா். சேலம் இரும்பாலை நிா்வாகத்தில் உள்ள 800-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் போராட்டத்தில் ஈடுபடுவா் என்றனா்.