எடப்பாடி அருகே பள்ளி ஆசிரியையிடம் 7 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற மா்ம நபா் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
கொங்கணாபுரம் ஒன்றியத்துக்கு உள்பட்ட சமுத்திரம் பகுதியைச் சோ்ந்தவா் ஆனந்தன். இவரது மனைவி ரீனா (36). இவா், தேவனூா் அரசு தொடக்கப் பள்ளியில் ஆசிரியையாகப் பணிபுரிந்து வருகிறாா்.
இந்நிலையில் திங்கள்கிழமை காலை ரீனா தனது இரு சக்கர வாகனத்தில் தான் பணிபுரியும் பள்ளிக்குச் சென்றுள்ளாா்.
தேவனூா் பிரிவு அருகில் உள்ள ஏரிக்காடு பகுதியில் அவா் சென்றபோது, அங்கு இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத மா்ம நபா், ரீனா அணிந்திருந்த 7 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து ஆசிரியை ரீனா அளித்த புகாரின் பேரில் கொங்கணாபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.