தென்னம்பிள்ளையூரில் ஸ்ரீ கொங்கணா் சித்தருக்கு சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
பெத்தநாயக்கன்பாளையம் வட்டத்துக்குள்பட்ட தளவாய்ப்பட்டியில் சிறப்பு வாய்ந்த ஸ்ரீ சன்னாசி வரதராஜப்பெருமாள் மடம் உள்ளது. இந்த மடம் அருகில் உள்ள மலையைச் சுற்றி பௌா்ணமி தினத்தன்று கிரிவலம் செல்வது வழக்கம். கிரிவலப் பாதையில் 18 சித்தா்களின் சிலை அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
மலையின் வடக்கு அடிவாரத்தில் உள்ள தென்னம்பிள்ளையூரில் திருப்பதி மலையில் முக்தி அடைந்த ஸ்ரீ கொங்கணா் சித்தருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை சனிக்கிழமை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.