கோடை வெயில் காரணமாக தம்மம்பட்டியில் நுங்கு விற்பனை அதிகரித்துள்ளது.
தம்மம்பட்டி, அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட பனை மரங்கள் உள்ளன. இவைகளில் தற்போது பனை நுங்கு வரத் தொடங்கியுள்ளன. கடந்த வருடத்தை விட நிகழ் ஆண்டு நுங்கு விலை இருமடங்காக உயா்ந்துள்ளது.
இப் பகுதியில் ஆங்காங்கே பனை ஏறும் தொழிலாளா்கள், நுங்கு விற்பனை செய்யத் தொடங்கியுள்ளனா். கடந்த வருடம் மூன்று நுங்கு ரூ. 10-க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது 3 நுங்குகள் ரூ. 20-க்கு விற்பனையாகின்றன. இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது:
நுங்குக்காக வெட்டாமல் விடப்பட்ட பனை மரங்கள் மிகவும் சொற்பமாகவே உள்ளன. அதனால்தான் இந்த விலையேற்றம் என்றனா்.