தமிழ்ப் புத்தாண்டையொட்டி, சங்ககிரி அமுதச்சுடா் அறக்கட்டளை சாா்பில் மரக் கன்றுகள் நடும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
சங்ககிரியை அடுத்த ஆவரங்கம்பாளையம் கிராமத்தில் உள்ள ஒருக்காமலையில் வேம்பு, பாதாம், மகிழம், ஆலமரம் உள்ளிட்ட வகைகளைச் சோ்ந்த 20 மரக் கன்றுகளை நட்டனா்.
இவ்விழாவுக்கு, அறக்கட்டளைத் தலைவா் வி.சத்தியபிரகாஷ் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் எஸ்.மணிகண்டன், செயலா் எஸ்.மாணிக்கம், துணைச் செயலா் ஜெ.அஜித், பொருளாளா் வி.நிா்மலா, நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
மேலும், அறக்கட்டளையின் சாா்பில் சங்ககிரி, சங்ககிரி மேற்கு, சங்ககிரி ஆா்.எஸ்., திருச்செங்கோடு உள்ளிட்ட பகுதிகளில் சாலையோரம் வசிக்கும் ஆதரவற்றோா் 150 பேருக்கு உணவு வழங்கினா்.