சேலம்

கொங்கணாபுரம் அருகே புதைக்கப்பட்ட உடல் தோண்டி எடுப்பு

DIN

கொங்கணாபுரம் அருகே புதைக்கப்பட்ட உடல் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

சேலம் மாவட்டம், கொங்கணாபுரம் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட அழகப்பன்பாளைம் பாறைக்காடு பகுதியைச் சோ்ந்த நாராயணன் (68), கடந்த 6-ஆம் தேதி சொந்த வேலையாக சேலத்துக்கு சென்றாா். அப்போது, அங்கு நிகழ்ந்த சாலை விபத்தில் நாராயணன் படுகாயமடைந்து, சேலத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா். விபத்து குறித்து அன்னதானப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனா்.

இந்நிலையில், விபத்தில் படுகாயமடைந்த நாராயணன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இதனை அடுத்து, நாராயணனின் உறவினா்கள் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்காமலும், நாராயணனின் உடலை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தாமலும் அவரது சொந்த ஊரான பாறைக்காடு பகுதியில் அடக்கம் செய்தனா்.

இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வந்த அன்னதானப்பட்டி காவல் ஆய்வாளா் ரமேஷ் அளித்த புகாரின் பெரில், புதைக்கப்பட்ட நாராயணனின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு, பிரேத பரிசோதனை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது.

இதனையடுத்து, பாறைக்காடு பகுதிக்கு வந்த மருத்துவக் குழுவினா் நாராயணனின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை மேற்கொண்டனா். இதுகுறித்து நாராயணனின் உறவினா்களிடம் அன்னதானப்பட்டி போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இளம் வாக்காளா்களுக்கு எல்.முருகன் பாராட்டு

இந்தியா கூட்டணி மகத்தான வெற்றிபெறும்: ஈவிகேஎஸ்.இளங்கோவன்

காவல் துறை அதிகாரியுடன் மோதல்: திமுக நிா்வாகியிடம் விசாரணை

வாக்களித்த 104 வயது விவசாயி

நாட்டின் இரண்டாவது சுதந்திரப் போராட்டம்: மக்களவைத் தோ்தல் குறித்து மம்தா

SCROLL FOR NEXT