பெத்தநாயக்கன்பாளையம், வீரகவுண்டனூரில் தனியாா் வேளாண் கல்லூரியின் இறுதியாண்டு மாணவா்கள், விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பு விளைவிக்கும் தென்னை காண்டாமிருக வண்டு, மூக்குத்தி பூண்டை குறைந்த செலவில் கரிம முறையில் கட்டுப்படுத்தும் வழிகள் குறித்து செயல்முறை விளக்கம் அளித்தனா்.
இந்த நிகழ்வில் 30க்கும் மேற்பட்ட விவசாயிகள் பயனடைந்தனா்.