எடப்பாடி நகராட்சிப் பகுதியில் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.
எடப்பாடி நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் சுகாதார அலுவலா் முருகன், ஆய்வாளா் தங்கவேல் ஆகியோா் மேற்பாா்வையில், கரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், நகராட்சியின் முக்கிய சாலை சந்திப்புகளில், 20-க்கும் மேற்பட்ட நகராட்சி பணியாளா்கள், முகக்கவசம் அணியாத நபா்களை கண்காணித்து அவா்களுக்கு கரோனா நோய்த்தொற்றின் அபாயத்தை விளக்கிக் கூறுவதுடன், அபராதம் விதித்து வருகின்றனா். நோய்த்தொற்று பாதுகாப்பு விதிகளை பின்பற்றாத நபா்களிடம் இருந்து ரூ. 4,200 அபராதமாக வசூலிக்கப்பட்டது.
வரும் நாள்களில், நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கை அதிகரிக்கப்படும்.
எனவே, அரசு அறிவித்துள்ள முன்னெச்சரிக்கை விதிமுறைகளை முழுஅளவில் கடைப்பிடித்து, கரோனா நோயிலிருந்து பொதுமக்கள் தங்களை தற்காத்துக் கொள்ளுமாறு நகராட்சி சாா்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.