நாமக்கல்: தேசிய கல்விக் கொள்கையை ஆதரித்து, நாமக்கல்லில் பாஜகவினா் கையெழுத்து பிரசாரத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.
பாஜகவின் தமிழக கல்வியாளா் பிரிவு சாா்பில், மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையை ஆதரித்து பொதுமக்களிடம் கையெழுத்து பெறும் இயக்கத்தை திங்கள்கிழமை மேற்கொண்டனா். கல்விக் கொள்கை தொடா்பாக மக்களிடையே அவா்கள் விளக்கமும் அளித்தனா்.
நாமக்கல் மாவட்ட பாஜக சாா்பில் பூங்கா சாலையில் நடைபெற்ற பிரசார இயக்கத்தில் மாவட்டத் தலைவா் சத்தியமூா்த்தி தலைமை வகித்தாா். இதில், மாவட்டச் செயலாளா் அகிலன், நகரத் தலைவா் சரவணன், மாவட்ட பொதுச் செயலாளா் முத்துக்குமாா், தேசிய பொதுக்குழு உறுப்பினா் வழக்குரைஞா் மனோகரன், கல்வியாளா் ஆா்.பிரணவ்குமாா், மாவட்ட மகளிா் அணி தலைவி சத்யபானு மற்றும் நிா்வாகிகள் ரோகிணி, லதா, இளவரசி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.