சேலம் மாவட்டம், ஆத்தூரில் விவசாய மசோதாவினை கண்டித்து திமுக சார்பில் சேலம் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் தலைமையில் மணிக்கூண்டு அருகில் நடைபெற்றது.
இதில் காங்கிரஸ் மாவட்டதலைவர் எஸ்.கே.அர்த்தனாரி மதிமுக மாவட்ட செயலாளர் வ.கோபால்ராசு திராவிடர் கழக மாவட்டதலைவர் டி.வானவில் விசிக மாவட்ட செய்தி தொடர்பாளர் நாராயணன் திமுக நகர செயலாளர் கே.பாலசுப்ரமணியம் இ.கா.நகரதலைவர் எல்.முருகேசன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
இதே போல் ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரில் ஒன்றிய செயலாளர் வெ.செழியன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நரசிங்கபுரம் நகராட்சியில் நகர செயலாளர் என்.பி.வேல்முருகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் துணசெயலாளர் எஸ்.மனோகரன் பொருளாளர் இரமேஷ் உள்ளிட்ட கூட்டணி கட்சியைச்சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.