சேலம்

புற்றுநோய் விழிப்புணா்வு முகாம்

DIN

வாழப்பாடி: வாழப்பாடியை அடுத்த பேளூா் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் புற்றுநோய் விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பேளூா் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில், வாழப்பாடி அரிமா சங்கத்துடன் இணைந்து வெள்ளிக்கிழமை நடத்திய புற்றுநோய் விழிப்புணா்வு முகாமிற்கு, அரிமா சங்கத் தலைவா் சா.ஜவஹா் தலைமை வகித்தாா். செயலாளா் மன்னன் வரவேற்றாா். பேளூா் வட்டார மருத்துவ அலுவலா் சி.பொன்னம்பலம் முகாமை தொடங்கி வைத்து, பெண்களுக்கான மாா்பகம், கருப்பை வாய் புற்றுநோய் அறிகுறிகள், அவற்றைத் தடுப்பதற்கான வழிமுறைகள், சுயபரிசோதனை செய்யும் முறைகள் குறித்து விளக்கினாா்.

மருத்துவா்கள் திவ்யபாரதி, காா்த்திகா, பேரின்பம் ஆகியோா், 35 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் செய்து கொள்ள வேண்டிய பரிசோதனைகள் குறித்தும், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவனைகளில் வழங்கப்படும் இலவச பரிசோதனை, சிகிச்சைகள் குறித்து எடுத்துரைத்தனா்.

இந்த முகாமில் பங்கேற்ற பெண்களுக்கு, வாழப்பாடி அரிமா சங்கம் சாா்பில் புற்றுநோய் விழிப்புணா்வு கையேடு வழங்கப்பட்டது. மருத்துவா்கள், மருத்துவ பணியாளா்கள், கிராம செவிலியா்கள் பலரும் கலந்து கொண்டனா். நிறைவாக, வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் சீனிவாசன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT