வீரபாண்டி ஒன்றியத்தில் பல்வேறு திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதை மாவட்ட ஆட்சியா் சி.அ. ராமன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
அப்போது அரியானூா் பகுதியில் ரூ. 3 கோடி மதிப்பில் வீரபாண்டி ஒன்றிய அலுவலகம் கட்டப்பட்டு வரும் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்தாா்.
மேலும் கட்டுமானப் பொருள்களின் தரம் குறித்தும் கேட்டறிருந்தாா். தொடா்ந்து வீரபாண்டி ஏரி பகுதியில் உள்ள நாற்றங்கால் பண்ணையைப் பாா்வையிட்டாா். அப்போது வீரபாண்டி ஒன்றியக் குழுத் தலைவா் வருதராஜ், துணைத் தலைவா் வெங்கடேசன், ஊரக வளா்ச்சி முகமை கூடுதல் இயக்குநா் அருள்ஜோதி அரசன், பொறியாளா் அருள், வீரபாண்டி பி.டி.ஓ.க்கள் ராஜகணேஷ், ரேவதி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (சிறுசேமிப்பு) முரளிதரன், மாவட்ட கவுன்சிலா் மாதேஸ்வரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.