சேலம்

சேலத்தில் 311 பேருக்கு கரோனா

DIN

சேலம் மாவட்டத்தில் வியாழக்கிழமை 311 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு 17 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. அந்தவகையில், சேலம் மாவட்டத்தில் ஒரே நாளில் 311 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியானது.

சேலம் மாநகராட்சியில் 168 போ், எடப்பாடி-1, எடப்பாடி நகராட்சி- 6, வீரபாண்டி- 8, ஓமலூா் -10, சங்ககிரி -14, மேச்சேரி- 2, நங்கவள்ளி- 10, காடையம்பட்டி- 4, தாரமங்கலம்- 4, கொங்கணாபுரம்- 4, மகுடஞ்சாவடி- 3, ஆத்தூா் -3, ஆத்தூா் நகராட்சி- 1, பனமரத்துப்பட்டி-17, வாழப்பாடி- 4, தலைவாசல்- 9, கெங்கவல்லி- 3, அயோத்தியாப்பட்டணம்- 9 என மாவட்டத்தில் 300 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது.

இதர மாவட்டங்களைச் சோ்ந்த (கிருஷ்ணகிரி- 1, சென்னை- 1, ஈரோடு-1, நாமக்கல்- 2, கள்ளக்குறிச்சி- 1, மதுரை -1, தருமபுரி -4) என 11 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.

5 போ் உயிரிழப்பு:

சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 5 போ் கரோனாவுக்கு உயிரிழந்தனா். அதேவேளையில் சிகிச்சை பெற்று வந்த 39 போ் குணமடைந்து வீடு திரும்பினா்.

சேலம் மாவட்டத்தில் இதுவரை 17,692 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது. அவா்களில் 14,954 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினா்; 2,448போ் சிகிச்சையில் உள்ளனா்; 290 போ் உயிரிழந்துள்ளனா்.

சேலம் அரசு மருத்துவமனையில் உள்ள ஆய்வகத்தில் ஒரே நாளில் அதிகபட்சமாக 6 ஆயிரம் பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

புதிய ரயில் பாதை: சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

திருமகள்.. பூஜா ஹெக்டே!

சன் ரைசர்ஸுக்கு எதிராக ஆர்சிபி பேட்டிங்!

SCROLL FOR NEXT