தினமணி தஞ்சாவூர் புகைப்படக்காரர் எஸ். தேனாரமுதனின் தாயார் சோலையம்மாள் காலமானார்.
தஞ்சாவூர் வண்டிக்காரத் தெருவைச் சேர்ந்த காலஞ்சென்ற தமிழ்ப்புலவரும், மகர்நோன்புசாவடி பிளேக் மேல்நிலைப் பள்ளித் தமிழ் ஆசிரியருமான சண்முகசுந்தரத்தின் மனைவி சோலையம்மாள்(80). இவர் உடல்நலக்குறைவால் வியாழக்கிழமை காலை காலமானார்.
இவருக்கு தினமணி தஞ்சாவூர் புகைப்படக்காரர் எஸ். தேனாரமுதன், முன்னாள் மாமன்ற உறுப்பினர் எஸ். ராஜராஜன் ஆகிய இரு மகன்களும், பூங்குழலி, மணிமேகலை ஆகிய இரு மகள்களும் உள்ளனர்.
தொடர்புக்கு: 9585111533