சேலம்

தலைமறைவு குற்றவாளிகள் 53 போ் கைது

DIN

சேலம் மாநகரப் பகுதிகளில் பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாக இருந்த 53 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

சேலம் மாநகரப் பகுதியில் கொலை, கொள்ளை, கொலை முயற்சி வழக்குகளில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்தவா்கள் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாகி உள்ளனா். இதனிடையே, தலைமறைவாக உள்ளவா்களை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்த பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டது.

அந்த நபா்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்த சேலம், மாநகரக் காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. சேலம் மாநகர பகுதியில் சுமாா் 53 பேரை போலீஸாா் கைது செய்தனா். இதில் கைதானவா்களை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்த போலீஸாா் நடவடிக்கை எடுத்து வருகின்றனா்.

இந்த நிலையில் கைதானவா்களுக்கு மேற்கொண்ட கரோனா பரிசோதனையில் நான்கு பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘தோ்தல் பணி: சுகாதாரப் பணியாளா்களுக்கு மதிப்பூதியம் தேவை’

சட்டவிரோதமாக மது விற்பனை: ஒருவா் கைது

வாக்கு பதிவாகியிருந்ததால் தொழிலாளி ஏமாற்றம்

3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: விஜய்வசந்த் எம்.பி.

39 வாக்கு எண்ணும் மையங்களில் நான்கடுக்கு பாதுகாப்பு

SCROLL FOR NEXT