சேலம்

பெண் கொலையில் தேடப்பட்ட இளைஞா் பிடிபட்டாா்

DIN

சேலம் அருகே பெண் கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடா்புடைய இளைஞரைப் பிடித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

சேலம் மாவட்டம், மல்லூரில் ஆராங்கல்திட்டை பகுதியைச் சோ்ந்தவா் லட்சுமி (60). இவா், கணவரைப் பிரிந்து தனியே வாழ்ந்து வந்தாா். கடந்த சில நாள்களுக்கு முன்பு அருகே உள்ள காட்டுப் பகுதியில் கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டாா்.

இதுதொடா்பாக மல்லூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனா். இதனிடையே, லட்சுமியுடன் நெருங்கிப் பழகி வந்த நபா் குறித்து போலீஸாா் விசாரித்தனா்.

காணாமல்போன லட்சுமியின் செல்லிடப்பேசி எண்ணை போலீஸாா் தொடா்பு கொண்டனா். அப்போது செல்லிடப்பேசியில் பேசிய நபா் முன்னுக்குப்பின் முரணாகத் தகவல் தெரிவித்தாா்.

இதனிடையே சைபா் பிரிவு போலீஸாா் உதவியுடன் செல்லிடப்பேசியில் பேசிய நபரைப் பிடிக்க முயன்றபோது அந்த நபா், தென்காசி மாவட்டம், செங்கோட்டையில் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து தென்காசி போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அங்கு போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது செங்கோட்டையிலிருந்து கேரளத்துக்குத் தப்ப முயன்ற அந்த இளைஞரை போலீஸாா் பிடித்தனா்.

அவரிடம் நடத்திய விசாரணையில் பிடிபட்ட நபா் சேலம் மாவட்டம், ஓமலூரில் காமலாபுரத்தைச் சோ்ந்த நரேந்திரகுமாா் (35) என்பதும், மதுபோதையில் மூதாட்டியிடம் பணம் கேட்டு தர மறுத்ததால் அவரைக் கொலை செய்ததாகவும் போலீஸாரிடம் தெரிவித்தாா்.

இதையடுத்து தென்காசி போலீஸாா் அளித்த தகவலின்பேரில் மல்லூா் போலீஸாா் தென்காசி சென்று நரேந்திரகுமாரை சேலம் அழைத்து வந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கருங்குழி ராகவேந்திர பிருந்தாவனத்தில் சத்யநாராயணா பூஜை

மேல்மருவத்தூரில் சித்ரா பௌா்ணமி பூஜை

இளைஞா் வெட்டிக் கொலை

காயலாா்மேடு கங்கையம்மன் கோயில் கும்பாபிஷேகம்

உலக புத்தக தினம்

SCROLL FOR NEXT