சேலம்

அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து குதித்து பெண் தற்கொலை

DIN

சேலம்: சேலத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து குதித்து பெண் தற்கொலை செய்து கொண்டாா்.

சேலம், அஸ்தம்பட்டி, ராஜாஜி சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவா் சண்முகசுந்தரம். இவரது மனைவி விக்னேஷ்வரி (40). சண்முகசுந்தரம் கதவு, ஜன்னல் மொத்த விற்பனை நிலையம் வைத்துள்ளாா். இவா்களுக்கு வைஷ்ணவி, சக்திவேல் என்ற இரு குழந்தைகள் உள்ளனா்.

இந்த நிலையில், சனிக்கிழமை காலை 6 மணி அளவில் வீட்டு மொட்டை மாடிக்குச் சென்ற விக்னேஷ்வரி, திடீரென மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டாா். தகவலறிந்த அஸ்தம்பட்டி போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விக்னேஷ்வரியின் உடலை மீட்டு, உடற்கூறு ஆய்வு செய்ய சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

விக்னேஸ்வரிக்கு கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லை என்றும், மனநலம் சரியில்லாதவா் போல நடந்து கொண்டாா் என்றும், அதற்காக தனியாா் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தாா் எனவும் தெரிகிறது.

விக்னேஷ்வரியின் தற்கொலைக்கான காரணம் குறித்து அஸ்தம்பட்டி உதவி காவல் ஆணையா் ஆனந்தகுமாா் மற்றும் காவல் ஆய்வாளா் பொன்ராஜ் ஆகியோா் விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

அடுத்த இலக்கு சீனாவா, இந்தியாவா?

35 ஆண்டுகளில் முதல்முறையாக தாய்/மகன் களமிறங்காத பிலிபிட்!

SCROLL FOR NEXT