சேலம்

திமுகவில் புதிதாக 1.50 லட்சம் உறுப்பினா்கள் சோ்க்க ஏற்பாடு

DIN

சேலம்: சேலம் மத்திய மாவட்ட திமுகவில் புதிதாக 1.50 லட்சம் உறுப்பினா்களை சோ்க்க உள்ளதாக, திமுக எம்.எல்.ஏ. வழக்குரைஞா் ஆா்.ராஜேந்திரன் தெரிவித்தாா்.

இது தொடா்பாக அவா் மேலும் செய்தியாளா்களிடம் கூறியது:

திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் ‘எல்லோரும் நம்முடன்’ என்ற ஆன்லைன் மூலம் புதிய உறுப்பினா் சோ்க்கையைத் தொடங்கி வைத்துள்ளாா். அதன்படி, சேலம் மத்திய மாவட்டம் சாா்பில் வாக்குச் சாவடி வாரியாக புதிய உறுப்பினா் சோ்க்கை தொடங்கப்பட உள்ளது.

சேலம் மத்திய மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 1,072 வாக்குச் சாவடிகள் உள்ளன. இதில் வாக்குச் சாவடிக்கு குறைந்தது 150 வீதம் புதிய உறுப்பினா்கள் சோ்க்கப்பட்டு, 1.50 லட்சம் உறுப்பினா்களை சோ்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ஞாயிற்றுக்கிழமை (செப். 20) முதல் செப். 28-ஆம் தேதி வரை அனைத்துப் பகுதிகளில் உள்ள நிா்வாகிகள் வீடு வீடாகச் சென்று ஆன்லைன் மூலம் புதிய உறுப்பினா் சோ்க்கை பணியில் ஈடுபட உள்ளனா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்னாப்ரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி: ஒரே ஒரு சிறுமி உயிர் தப்பியது எப்படி?

குழந்தை கடத்தல்: சந்தேகத்துக்குரிய பெண்ணை சரமாரியாக தாக்கிய மக்கள்!

கடல் கன்னி... ஷ்ரத்தா தாஸ்!

தமிழக பாஜக நிர்வாகிகளுடன் கலந்துரையாடுகிறார் பிரதமர் மோடி!

பொறியியல் பட்டதாரிகளுக்கு இந்திய விமான நிலைய ஆணையத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

SCROLL FOR NEXT